திங்கள், மார்ச் 12, 2012

.


   
ஒசாமா கடலில் அடக்கம் செய்யப்பட வில்லை-
விக்கி லீக்ஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா வசித்ததாக கூறப்பட்ட வீட்டில் புகுந்து அமெரிக்காவின் கடற்படையின் ரெட் ஸ்கூவாட்ரன் சீல் பிரிவைச் சேர்ந்த (Red Squadron of navy seals ) கமான்டோக்கள் அவரை 2-6-2011 அன்று சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டதும் அதிவேகமாக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டு விட்டதாகவும் அன்றைய அமெரிக்க பத்திரிகைகள் கூறின. 

முறைப்படி அடக்கம் செய்யாமல் எப்படி கடலில் வீசலாம் என்ற எதிர்ப்பு சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து கிளம்பியதும் முறைப்படி இஸ்லாமிய சடங்குகள் செய்த பின்னரே கனமான பாலித்தீன் பையிலிட்டு பெட்டியில் வைத்து கடலில் அடக்கம் செய்யப்பட்டது என்று அடுத்த பல்டி அடித்தனர்.
இப்பொழுது அவரது உடலை கடலில் அடக்கம் செய்யப்படவில்லை என்றும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான 'சி.ஐ.ஏ.'வின் விமானம் மூலம் அமெரிக்காவின் பெத்ஸ்டாவில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின்  இணையதளமான 'ஸ்ட்ராட்போர்'ரில் (Stratfor) ஸ்ட்ராட்ஃபார் துணை தலைவர் ஃப்ரைட் பர்டன் அனுப்பிய இ-மெயில் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் 'விக்கிலீக்' இணையதளத்துக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாகவும் விக்கிலீக்ஸ் அதை வெளியிட்டுள்ளதாகவும்  பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக கூறப்பட்ட செய்தியை அமெரிக்கப் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டதும் அதை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் ஆதரவு ஊடகங்களும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அதை மிகப்பெரிய வீர, தீர செய்களைப்போல் சித்தரித்துக்காட்டி செய்திகள் வெளியிட்டன போதாக் குறைக்கு சீல் படையினரின் ஹெல்மட்டில் இணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த அதி நவீன கேமரா மூலம் மேல்படி திகிலூட்டும்(?) சம்பவத்தை துல்லியமாக படமெடுக்க ஏற்பாடு செய்து அதை வெள்ளை மாளிகையின் எமர்ஜென்ஸி ரூமில் லைவில் பார்க்க ஏற்பாடு செய்து ஒபாமாவும் வெள்ளை மாளிகையின் முக்கிய அமைச்சர்களும் கண்டு களித்தனர் அதை தொலைகாட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு டெலிகாஷ் செய்தன.


அப்பொழுதே உலக மக்களில் அதிகமானோர் மேல்படி சம்பவம் ஒரு மகா செட்டப் என்பதை புரிந்து கொண்டனர் இப்பொழுது அவைகள் அனைத்தும் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவில்லை எனும் சமீபத்திய விக்கி லீக்ஸின் தகவல் உண்மைப்படுத்தி விட்டது. 


ஒசாமாவை கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மை என்றால் கொல்லப்பட்டது ஒசாமா தான் என்பது உண்மை என்றால் அந்த உடலைத் தேடி வெளியில் கொண்டு வந்து அதை ஒசாமா இல்லை என்பதை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன் ஆழ்கடலில் சென்று தேடி எடுக்க 4 லட்சம் டாலர் செலவாகும் இந்த செலவை மட்டும் அரசு ஏற்க தயாரா என்று 1972 ம் ஆண்டு முதல் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் உள்ள பொருட்களை மற்றும் கடலில் இருக்கும் பொக்கிஷங்களை  தேடிக்கொடுக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஆழ்கடல் நீச்சல் வீரரான பில்வாரன் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்தப் பேட்டியை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு கூறுகிறோம். 

இதற்கு அறவே வாய் திறக்காத ஒபாமாவின் மௌனத்தைக் கண்டு அன்றே இது ஒபாமா தயாரித்த மினி திரைபடம் என்பதை அமெரிக்கர்கள் முடிவு செய்து விட்டனர்.

சுடப்பட்டது ஒசாமாவும் கிடையாது அந்த உடல் கடலில் வீசப்படவும் கிடையாது என்பதற்கு அன்றே ஆதாரம் கிடைத்து விட்டது. 

விடாது விரட்டியது ஏன் ?
இரட்டை கோபுரத்தை ஒசாமா இடிக்கவில்லை என்பது அன்றைய புஷ்ஷீக்கும் தெரியும், இன்றைய ஒபாவுக்கும் தெரியும் பின் ஏன் அவரை விடாமல் இவர்கள் விரட்டினர் ?

ஆப்கானிஸ்தான் மாணவர்களைத் திரட்டி இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் நிலை நிருத்தினார், அங்கு நிருவப்பட்டிருந்திருந்த (வணங்குவதற்கு ஒரு ஆள் கூட இல்லாத) பழமை வாய்ந்த புத்தர் சிலையை உலக எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இடித்துத் தள்ளினார், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை எரித்துத் தள்ளினார், இனிவரும் காலங்களில் யாரும் கஞ்சா செடிகளைப் பயிரிடக் கூடாது என்று சட்டமியற்றினார் ஒசாமா.

உலக போலீஸ்(?) அமெரிக்காவுக்கு கட்டுப்படாத இவரது போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த அமெரிக்காவை இவரது இஸ்லாமிய சிந்தனை நமக்கு ஆபத்தாக முடியலாம் என்று கருதிய இஸ்ரேல் தூண்டி விட்டது.

இவரை இப்படியே விட்டால் இன்று ஆப்கானிஸ்தான் நாளை பாகிஸ்தான் என்று குறுகிய காலத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் அவர்களின் உறக்கத்தை கலைத்தது அதனால் இடிக்கபட வேண்டிய நிலையில் இருந்த இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கு ஒசாமா பெயரை சூட்டி மக்களை ஒசாமாவுக்கு எதிராக திசை திருப்பியது தான் அன்றைய இரைட்டை கோபுர தாக்குதல் நாடகம்.
 
இழப்புகள்.
கடந்த செப்டம்பர் 11,2011ல் இரட்டைகோபுரம் அவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதிலிருந்து 2-6-2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்டது வரை 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டத் தொகை மட்டும்  1.3 டிரில்லியன் டாலர் (ரூ. 60 லட்சம் கோடி).

அமெரிக்க ராணுவ வீரர்கள் என்று சொல்லப்படுகின்ற கோழைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் ஆறாயிரம் பேர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோர் மூவாயிரம் பேர் இதையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பதாயிரம் பேர், உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிரந்தர முடமாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 55  ஆயிரம் பேர்.

ஒசாமா கொல்லப்பட்டதாக புருடா விட்ட தினத்தன்று மட்டும் 31 சீல் படையினர் தாலிபான் விடுதலைப் போராளிகளால் ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்டனர். 
 

மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, மிகத் திறமை வாய்ந்த அணி, மிகவும் புத்திசாலித்தனமான அணி என்று அமெரிக்காவால் புகழப்படும் டீம்6 அணியினர் தான் மேல்படி ஹெலிகாப்டருடன் வைத்துக் கொளுத்தப்பட்ட சீல் பிரிவினர் இதை அறிந்து ஒபாமா அதிந்து விட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. ஒபாமா மட்டுமல்ல அனைவரையுமே அதிர வைத்தது.

ஒபாமா தயாரித்த மினி திரைப்படம் ஓர் ஃபளாஷ்பேக்
அமெரிக்க கடற்படையின் சீல்படையினர் இரண்டு ஹெலிகாப்டர்களில் அபோதாபாத்தில் பின்லேடன் வீட்டை நோக்கிப் பறந்தனர் அதில் ஒரு ஹெலிகாப்டர் தாலிபான் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது அதில் இருந்த 31 சீல் படையினரும் எரிந்து சாம்பலாகி விட்டனர் ஒன்று மட்டும் ஒசாமாவின் வீட்டு மாடியில் போய் இறங்கியது.

வீட்டின் மாடியில் இறங்கியதும் அசுர வெகத்தில் இறங்கிய சீல் படையினர் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வெளியில் நின்றவாறு நான்கு ரவுன்டுகள் சுட்டனர் இதன் பின்னரே வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்ததும் இவர்களைக் கண்ட ஒசாமா அவரது மனைவிக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டார் கணவரை காப்பாற்ற சீல் படையினருடன் அரவரது மனைவி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார் இறுதியில் சீல் படையினர் அவரையும் சுட்டார் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட ஒசாமாவையும் சுட்டுத் தள்ளினர். இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் அதாவது சரியாக 90 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் பிரனனும்அமெரிக்காவின் நேவி சீல் கமான்டர்  சக் பாரெர் என்பவரும் கூறுகின்றனர். இதில் ஜான் பிரணன் இரண்டு ஹெலிகாப்டர்கள் என்றும்,  சக் பாரெர் நான்கு ஹெலிகாப்டர்கள் என்றும் கூறுகின்றனர்.

சிந்திக்க சில துளிகள்.

இவர்கள் மேல்படி ஆப்பரேஷன் நடத்துவதற்கு முன் பாகிஸ்தானின் டாக்டர் ஷகீல் அப்ரிதி என்பவரை கைக்குள் போட்டு ஒசாமா இன்ன இடத்தில் தான் இருக்கிறார் அவரது டிஎன்ஏ வேண்டும் என்றுக் கேட்டுள்ளனர் அதற்காக அவரும் அபோதாபாத்தில் தடுப்பூசி முகாம் ஒன்றை அரசு அனுமதிப் பெறாமல் நடத்தி வீடு, விடாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாகவும் ஒசாமா வீட்டுக்குள் சென்ற பொழுது அவரைப் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் ஷகீல் அப்ரிதி சொன்னதாகவும்  இதை அறிந்த பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் இங்கிலாந்தில் வெளிவரும் திகார்டியன் பத்திரிகை கூறியது.

  • அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுக்க டாக்டர் உதவினார் என்பதை அறிந்தே பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது ஒசாமாவுக்குத் தெரியாமல் போகுமா ? நம்மைத் தேடுகின்றனர் என்று அப்பொழுதே தலைமறைவாகி இருக்க மாட்டாரா ?   
  • தாலிபான் விடுதலை போராளிகள் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதும் மற்றொரு ஹெலிகாப்டர் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை அவர்கள் கவனிக்காமல் விட்டிருப்பார்களா ?
  • ஹெலிகாப்டர் வந்து இறங்கும் அளவுக்கு அழுத்தமாக கட்டப்பட்ட அந்த வீட்டில் வெறிப்பிடித்த நேட்டோபப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் ஒசாமா பதுங்கு குழிகளை அல்லது தப்பி ஓடும் வேறு வழிகளை அமைக்காமல் இருந்திருப்பாரா ?
  • மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய சப்தம் வீட்டிற்குள் கேட்காமல் இருந்திருக்குமா ? அதைக்கேட்டு குறைந்த பட்சம் வீட்டிற்குள் வேறு எங்காவது ஓடி மறையாமல் மனைவியின் பின் புறம் தான் ஓடி ஒளிவாரா ?
  • இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் தனது வீட்டின் ஹாலில் சாதாரண பனியன் லுங்கியுடன் ஆயுதமில்லாமல் ஹாயாக மனைவியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாரா ?  
  • இரத்த வெறிப்பிடித்த நேட்டோப் படையினரால் இரவு பகலாக தேடப்பட்டுவரும் சர்வ தேச போராளி ஒருவர் ஆயுதம் தரித்த போராளிகளை தனது பாதுகாப்பிற்கு நிருத்தாமல் தனித்திருப்பாரா ?
  • ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மற்றொரு ஹெலிகாப்டர் ஒசாமா வீட்டை நோக்கிப் பறந்ததும் கண் இமைக்கும் நேரத்தில் ஒசாமாவுக்கு ( அங்கிருந்தது ஒசாமாவாக இருந்தால் ) தாலிபான்கள் தகவல் கொடுக்காமல் இருந்திருப்பார்களா ? அல்லது அவர்களே விரைந்து அங்கே வந்து சீல் படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டிருக்க மாட்டார்களா ?

என்ற எண்ணற்ற கேள்விக் கனைகளை ஒபாமாவை நோக்கிப் பாய்ந்தன அவைகள் எவற்றையும் செவி மடுக்காத ஒபாமா அமெரிக்காவின் பிரபல கடல் புதையல் வேட்டைக் காரர் பில்வாரன் விடுத்த அறிக்கைக்கும் பதிலளிக்க முடியாமல் திணறினார்.

இப்பொழுது தேர்தல் நெருங்கி விட்டதால் ஒபாமாவுக்கு ஒசாமாவின் இறந்த உடல் குறித்த மேட்டர் மிகப்பெரும் சலாவாலாக இருப்பதால் விக்கி லீக்ஸ் பார்வையில் படும் விதமாக தகவலை 'ஸ்ட்ராட்போர்'ரில் இ-மெயில் மூலம் கசிய விட்டு விட்டார்.

மக்கள் கேட்டால் அவரது அடக்கஸ்தலத்தை அவரது ஆதரவாளர்கள் வணக்கஸ்தலமாக ஆக்கி விடுவதுடன் அவரது ஆசியுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு விடலாம் எனும் காரணத்தை முன் கூட்டியே சொல்லி இருப்பதால் அதையேத் திருப்பி கோயபல்ஸ் ஸ்டைலில் கூறி மக்களை நம்ப வைத்து சுடப்பட்டது ஒசாமா தான் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தேர்தல் வியூகம் அமைத்து செயல் பட முடிவு செய்து விட்டார்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! திருக்குர்ஆன் 2:42.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், அக்டோபர் 04, 2011

.


كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

...அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன். 3:104



ஆப்கானிஸ்தானில் ஆட்டம் காணும் அமெரிக்கக் கூடாரம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...



அமெரிக்க வெள்ளை மாளிகை தாலிபான் போராளிகளிடம் சமாதானப் பேச்சு வார்த்தையை முடுக்கி விட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் பத்திரிகை கூறுகிறது. இதற்கு முன்பு ஒருமுறை அமெரிக்க வெளியறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒருப் பேட்டியில் தாலிபான்கள் ஆயுதங்களை கீழேப்போட்டால் எந்த நிமிடமும் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்றும் அறிவித்திருந்தார். 

கடந்த காலங்களில் ஒபாமா தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி தாலிபான் போராளிகளை சந்தித்து ரகசியமாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதே நியூயார்க் பத்திரிகை செய்தியின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் படுதோல்வி அடைந்து வருவதை அறிந்த சர்தாரி கடந்த ஆகஸ்ட் 22ல் ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ஆப்கான் மக்களின் இதயங்களை வெல்வதிலும், தாலிபான்களுடனான யுத்தத்தில் வெல்வதிலும் அமெரிக்கா தோற்று வருகிறது என்று கருத்துக் கூறியதற்காக அவர் மீது வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கடும் கண்டம் தெரிவித்திருந்தார் இன்று நியூயார்க் பத்திரிகையே அமெரிக்காவின் அன்டர்கிரவுன்ட் தூதை அம்பலப் படுத்தி விட்டது.

தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை என்றுக் கூறி ஆப்கானை விட்டு ஓட்டம் பிடிக்க அமெரிக்கா எடுத்த திடீர் முடிவுக்குக் காரமாக அமைந்தது சமீபத்திய தாலிபான்களின் அதிரடி நடிவடிக்கைகளாகும். இவ்வளவு சீக்கிரம் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடுவது கன்டிப்பாக அவர்களது முந்தைய திட்டமாகவும் இருக்கவில்லை அதனால் தான் சர்தாரி மீது சீறி விழவும் செய்தார் ராபர்ட் கிப்ஸ். 

கடந்த நவம்பர் 2010ல் கூடிய 48 நோட்டோ நாடுகளின் லிஸ்பன் உச்சி மாநாட்டில் 2014வரை ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் நீடிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2014க்குப் பிறகாவது நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து சென்றுவிடும் என்று தாலிபான்கள் கணவு காண வேண்டாம் 2014க்குப் பிறகும் கூட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம் என்றும் நேட்டோ செயலர் அனஸ்போ ராஸ்முசன் தெரிவித்திருந்தது சமாதானப் பேச்சு வார்த்தை திடீர் முடிவு என்பதற்கு ஆதாரமாகும்.  

ஆதாயம் இல்லாமல் அமெரிக்கா ஆற்றைக் கட்டி இறைக்காது என்பது உலகறிந்த செய்தியாகும். உலகில் எங்காவது இரு நாடுகளை மூட்டிவிட்டு குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு ஆதரவாகப் போர் புரியும்போது போரில் ஈடுபடுத்தப்படும் ஆயுதங்களுக்கு ஹை ரேட்டும், போர் வீரர்களுக்கும் போர் வீராங்கனை(?)களுக்கும் ஹெவி சம்பளமும் நிர்ணயித்துக் கொண்டு முதலில் வான்வழி தாக்குதலை தொடுத்து தரைப்போரில் ஈடுபட முடியாத அளவுக்கு எதிரிநாட்டு போர் வீரர்களை குண்டுகளைப் பொழிந்து அழித்து விடும். மிஞ்சியவர்கள் தரைப் போருக்குத் தயாரானால் தரைப் போர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகளை பொழிந்து பஸ்பமாக்கி விட்டு தரைப் படையிலும் நாங்கள் தான் வென்றோம் என்று மார்தட்டிக் கொண்டு அமெரிக்கப் போர் வீரர்களை பாதுகாப்பாக வீடு கொண்டுப் போய் சேர்த்து விடும். 

மேற்கூறும் அமெரிக்காவுக்கு ஆதரவான அம்சங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் தலை கீழ்.  ஆப்கானிஸ்தானில் போர் நடக்கும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவுக்கு இழப்பு 1500 கோடி என்று அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் இறக்கி விடப்பட்ட பன்னாட்டுப் படைகள் தாலிபான்களின் கொரில்லாத் தாதக்குதலினால் 2001லிருந்து செத்து மடிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2270 ( குறைவாக அறிவித்தே இத்தனை என்றால் முறையாக அறிவித்தால் எத்தனையாக இருக்கும் என்பதை வியூகித்துக் கொள்ளுங்கள்) 2009ல் மட்டும் 521 நேட்டோப் படையினரை பலி கொடுத்ததால் நோட்டோவின் கூடாரம் ஆப்கானிஸ்தானில் 2009 லேயே ஆட்டம் காணத் தொடங்கியது, அதே 2010ல் பலி எண்ணிக்கை 700ஆக உயர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை உலுக்கியது. இதையும் மீறி ஆப்கானிஸ்தானில் நிலை கொள்வதற்கே தங்களின் திட்டத்தை தீட்டி அதற்கான இறுதி முடிவை எடுத்தனர்.

நாள் தோறும் தாலிபான்களிடம் குண்டடிப் பட்டு அவசர சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாமல் மடிபவர்களே அதிகம் என்பதாலும் அதற்கான அவசர சிகிச்கை அளிப்பதற்கான உபகரனங்களும் ஆப்கானிஸ்தான் நேட்டோ ராணுவ முகாமில் குறைவு என்பதை அறிந்து அதை அதிகப்படுத்திக் கொண்டு ஆப்கானில் கூடாரத்தை அழுத்தமாக ஊண்டுவதற்கு முடிவு செய்து சுமார் 42 மில்லியன் டாலர் மதிப்பிலான அளவுக்கு மருந்துகளும், மருத்துவ உபரனங்களுமாக ஆப்கானுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆப்கானிஸ்தான் வரை பாதுகாப்பாக போய்ச்சேர்ந்த மேற்படி கன்டெய்னர்கள் நேட்டோ ராணுவ முகாமுக்கு போய் சேராமல் இடையில் மாயமானது தான் அமெரிக்காவை தாலிபான்களிடம் கதவைத் தாழிட்டுக் காலில் விழ வைப்பதற்கு எடுத்த முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்னுமொருக் காரணம் கடந்த டிசம்பர் 2010ல் ராணுவ வாகனம் ஒன்றில் தாலிபான்கள் மீது தாக்குதலுக்காகப் பயணித்த நேட்டோப் படையினரின் மீது தாலிபான் போராளிகள் தொடுத்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்தில் ஐந்து நேட்டோவினர் மாண்டதுடன் 9 நோட்டோவினர் படுமாயமடைந்தனர். இதற்கு பழிதீர்க்க நினைத்த நோட்டோவின் காண்டா மிருகங்கள் ஜனவரி 13ல் தாரிக் கொலாச்சே என்ற ஆப்கானிஸ்தானின் சிறிய குக்கிராமத்தில் அப்பாவி மக்கள் மீது கணரக குண்டுகளைப் பொழிந்து மொத்த கிராமத்தையுமே நிர்மூலமாக்கி விட்டனர். இதற்கு தாலிபான் போராளிகள் பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் தாலிபான்களின் கோட்டைகள் மீது சமாதானப் புறாவைப் பறக்க விட்டு வேகம் வேகமாக ஓடுவதற்கு முடிவுக் கட்டி விட்டனர்.

...அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன். 3:104



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.



وَأَخَذَ الَّذِينَ ظَلَمُواْ الصَّيْحَةُ فَأَصْبَحُواْ فِي دِيَارِهِمْ جَاثِمِينَ  {67}

11:67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.


 
வம்பிக்கிழுக்கும் வல்லரசுகள்

தாலிபான்கள் ரஷியர்களை விரட்டியடித்து விட்டு ஆப்கானிஸ்தானில் முழு இஸ்லாமிய ஆட்சியை பிரகடனப்படுத்தியதிலிருந்து அவர்கள் அமைத்திருந்த ஆட்சியை அகற்றி அவர்களை தீவிரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக உலக அரங்கில் சித்தரிக்கச் செய்வதற்காக அமரிக்க வாழ் யூதர்கள் அன்றைய ஜனாதிபதி புஷ்ஷிலிருந்து இன்றைய ஜனாதிபதி ஒபாமாவையும், உலகின் முக்கிய ஊடகங்களையும் கையில் எடுத்துக் கொண்டதில் ஓரளவு வெற்றிப் பெற்று விட்டார்கள் என்றேக் கூறலாம்.

உலக மக்களிடம் அவர்களை தீவிரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக சித்திரித்துக்காட்டி அதில் ஓரளவு வெற்றிபெற்றப் பின்னர் தாலிபான்களை ஆட்சியிலிருந்து முழுமையாக துடைத்தெறிந்து தங்களின் எடுபிடி ஒருவரை (கர்ஸாயை) பதவியில் அமர்த்தியப் பின்னரும் கூட தாலிபான்கள் என்றொரு இனமே உலகில் வாழக்கூடாது என்று பல வருடங்களாக அவர்கள் மீது பொய்க் காரணங்கள் கூறி பலமுறை பலமான தாக்குதலை தொடுத்து அதிகமாக அப்பாவி மக்களின் உயிரையேக் குடித்து  வருகின்றனர்.

இப்பொழுது ஆப்கானிஸ்தானின் மர்ஸா பகுதியில் தாலிபான்கள் வலுவாகக் கால் ஊண்டி இருப்பதாகவும், அங்கு அவர்களின் நிழல் அரசாங்கம் இயங்குவதாகவும் அவதூறுக் கூறி தீவிர தாக்குதலில் இறங்கி எண்ணிலடங்கா அப்பாவி மக்களை தினந்தோறும் அநியாயமாக கொன்று குவித்து வருகின்றனர் 22-02-2010 அன்று மர்ஸாப் பகுதியில் மலை ஓரத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருந்த பேரூந்து ஒன்றின் மீது கணரக குண்டுகளை வீசியதில் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் இதையறிந்த பொதுமக்கள் கர்ஸாய் மீது கடும் கண்டன் தெரிவித்தனர். பொதுமக்களின் கோபத்தை அறிந்த கர்ஸாய் தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தனது எஜமானர்களுக்கு தகவல் அனுப்பி ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ராணுவ தளபதி ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரைஸ்டலை தவறுதலாக நடந்து விட்டதாகக் கோரி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.

துல்லியமாக கண்டறியும் நவீண தொலைநோக்கு சாதனங்களின் துணையுடன் தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றது அமெரிக்க ராணுவம் என்பது உலகறியும். திட்டமிட்டே இதுப் போன்ற ஈனச்செயலை செய்து விட்டு தவறுதலாக நடந்து விட்டதாக பொய்கூறி வருவதை கடந்த காலங்களில் அவர்களது அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்ட ஈராக்கில் தினந்தோறும் நடைபெற்று வந்ததை அறிந்தோம் இதில் நடுநிலையான ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு சென்ற ஒன்றிரண்டு சம்பவங்களுக்காக மட்டும் அதே ஊடகங்கள் வாயிலாக அனாமதேய வருத்தம் ஒன்றை அறிவிக்கச் செய்து விடுவார்கள். ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாத ஏராளமான நிகழ்வுகள் இந்த ஈவிரக்கமற்றப்பாவிகளால் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போன உயிர் போனது தான் இதை நேர்ரமயான முறையில் விசாரித்து நீதி வழங்க உலகில் நீதிமன்றமே கிடையாது. சர்வதேச நீதிமன்றங்கள், செஞ்சிலுவைச சங்கங்கள் இயங்குவதெல்லாம் அவர்களுக்காக மட்டுமே முஸ்லிம்களுக்காக அல்ல.

இவைகள் அப்பாவி மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களே என்பதற்கு இன்னும் சில சான்றுகள்.

ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த காலத்தில் அதன் சுதந்திரப் போராளிகளை வென்று ஒடுக்க முடியாமல் திணறியதற்கு அங்கு அமையப் பெற்றுள்ள அடர்ந்த மலைகள் என்பதும் அதனைக் குடைந்து  போராளிகள் அமைத்துக் கொண்ட இருப்பிடங்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்த மலைகளுக்கு மேல் ரஷிய விமானங்கள் பறந்து பறந்து பல்லாயிரக்கணக்கான சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியும் ஒன்றும் செய்ய முடியாமல் வந்த வழியே திரும்பிச் சென்ற கதை இவர்கள் அறிந்ததே !

அதனால் அமெரிக்காவிலிருந்து புதிதாக அனுப்பப்பட்ட கூடுதல் படைகள் பலநாட்கள் நிலைகொண்டும் தாலிபான்களை அடித்து கணக்குக் காட்ட  முடியாமல் திணறும் பொழுது மனித உயிர்களின் மீது அறவே இறக்கமில்லாத கல்நெஞ்சம் கொண்ட ராணுவ ஜெனரல்கள் அவ்வப்பொழுது அப்பாவி மக்;களை அவர்களின் முக அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்களை சிதறச் செ;யயும் தாக்குதல்களைத தொடுத்து சிதறிய சடலங்களை படமெடுத்து இத்தனை ஆயிரம் தாலிபான்களை அழித்து விட்டோம் என்ற கணக்கை சமர்ப்பிப்பார்கள். துப்பாக்கியினால் சுட மாட்டார்கள் அவ்வாறு சுட்டால் அடையாளம் தெரிந்து விடும் என்பதற்காகவே அதிகமாக வாகணங்களில் மீது குண்டுகளை வீசுவார்கள் இதில் தான் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி விடும்.

இதுப்போன்று ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு முறையும் அப்பாவி மக்களை அடித்து நொறுக்கி சல்லடையாக துளைத்தெடுத்து சிதறிய மய்யித்துகளின் மீது இரத்த தாகம் தீரும் வரை நடந்து முடிந்தப் பின் அவர்கள் நடுநிலையான மக்களுக்குக் கூறுகின்ற காரணங்கள்
 
  1. பின்லேடனை ஒப்படைக்க மறுக்கின்றனர்.
  2. தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு வரமறுக்கின்றனர்

இவ்வாறு இவர்கள் கூறும் வடிகட்டியப் பொய்களை வெட்கமின்றி அரங்கேற்றுவதற்கு தயாராக இருக்கும் உலகின் சிலப் பாஷிச ஊடகங்கள்.

நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளா ?.

அவர்கள் சிறந்த பண்பாளர்கள், நல்லொழுக்கமுடையவர்கள், நாகரீகமானவர்கள் என்பதற்கு அவர்களுடன் தங்கி இருந்தவர்கள் பலருடைய மனம் திறந்த பேட்டியை உதாரணமாக்கலாம் அதில் முக்கியமாக அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு பேட்டி அளித்து உலக கவனத்ததை ஈர்த்த யுவான் ரிட்லி அவர்களின் அனுபவம்.

தாலிபான்களை சந்தித்து நேரடிப் பேட்டி எடுத்து வெளியிடுவதற்காக 1998ல் அமெரிக்கா ஆப்கான் மீது உச்சக்கட்ட தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த அபாயகரமான நாட்களில் தலைக்கு மேலிருந்து பொழியும் குண்டுகளை துச்சமெனக் கருதி தாலிபான்களின் கோட்டைக்குள் புகுந்து அவர்களால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்த பிரித்தானிய பத்திரிக்கையின்  நிரூபர் வீரமங்கை யுவான் ரிட்லி அவர்கள் தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்டு பிரிட்டன் சென்றப் பின் தாலிபான்களின் நன்னடத்தையை நியூஸ் வீக் பத்திரிகைக்கு பேட்டியளித்து விட்டு அதேப் பத்திரிகையில் கிருஸ்தவர்களின் மதவெறியையும், முஸ்லீம்களின் மார்க்கப்பற்றையும் தாலிபான்களின்; மூலம் உணர்ந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கிப் புறப்படுகின்றேன் என்றுக் கூறியது தாலிபான்கள் சிறந்தப் பண்பாளர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாகும்.

1.         பின்லேடனை ஒப்படைக்க மறுக்கின்றனர்.

பின்லேடனை ஒப்படைப்பதற்கு பின்லேடன் மீது யூதப் பொய்யர்களின் அமெரிக்க கைக்கூலிகள் கூறும் காரணங்கள் உண்மையானவைகளா ?

பின்லேடன் தீவிரவாதி என்று அவர்கள் சமர்ப்பிக்கும் காரணங்கள் சரியானவைகளாக இருந்தால் உண்மையில் தீவிரவாதத்தை விரும்பாத அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், ஆட்சி நெறியாகவும் ஆக்கிக் கொண்ட நற்பண்பாளர்களாகிய தாலிபான்களுக்கு அது அழகல்ல என்பதில் எள்ளலவும் மாற்றுக்கருத்தில்லை.

கருங்கடலுக்கடியில் லாவகமாக நீந்தித் தவழும் கருப்பு மீன்களின் மச்சங்களைக் கூட துல்லியமாகப் படமெடுத்து உலகுக்கு அனுப்பும் ஆற்றல் வாய்ந்த சேட்டிலைட்களை ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையில் மிமிக்ரி செய்யப்பட்ட ஆடியோ வாய்ஸை மானங்கெட்டவர்கள் வைத்துக் கொண்டு இது தான் பின்லேடன் தீட்டிய சதிதட்டத்திற்கு ஆதாரம் என்பது வினோதமாக இல்லையா ?

1998ல் கிழக்காப்பிரிக்;காவில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பின்லேடன் தான் காரணம் என்றுக் கூறி ஆப்கான் மீது தாக்குதல் நடத்தியபொழுதே தாலிபான்களின் தலைவர் உமர் முல்லா அவர்கள் அப்போதைய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ஆதாரங்களை தரும்படி நேரடியாக தொலைபேசியில் உரையாடியதை அப்பொழுது அல்ஜஸீரா தொலைக் காட்சி ஒலிபரப்பியதை அனைவரும் அறிவர் அதற்கான ஆதாரத்தை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இன்றுவரை ஒப்படைக்க வில்லை.

நீதியுடனும், மனசாட்சியுடனும் நடக்கக்கூடிய தாலிபான்கள் அமெரிக்காவுடைய பின்லேடனின் மீதான குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தி விட்டுவிடாமல் பின்லேடனை விசாரணைக்குட்படுத்தி அவரது ஆதரவாளர்களை விசாரளை முடியும்வரை ஆயுதங்களை களையச் செய்து உத்தரவிட்டு பின்லேடனை தலைமை கமாண்டர் உமர் முல்லா அவர்களின் உத்தரவுக்கு கட்டுப்படும் படி பணித்தார்கள், அவரது கைப் பேசி வரை எவருடனும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு பறித்துக் கொண்டு இவற்றிற்கு உடன்பட்டு ஒத்துழைத்தால் இங்கு தங்கலாம் விருப்பமில்லை என்றால் விரும்பிய நாட்டிற்கு இடம் பெயர்ந்து செல்லலாம் என்றத் தீர்ப்பையும் அவர்களது அரசாங்கம் இயங்கிய காலகட்டத்தில் உச்சநீதி மன்றம் அறிவித்தது ஆதாரம். நேற லுழரம வுiஅநளஇ 4-3-1999.

தாலிபான்களின் ஆட்சி பறிக்கப்பட்டு தொடர்ந்து அமெரிக்கா தாலிபான்களின் மீதான தாக்குதலை அதிகரிக்கச் செய்த பின்னரே அவர்கள் இணைந்து கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்ட்டனர்.

2.         பின்லேடனின் அல்கைதா தான் தாலிபான்களை இயக்குகிறது, உலகில் நிகழும் அதிகமான குண்டு வெடிப்புகளுக்கு அல்கைதா தான் காரணம் என்றால் இதுவரை ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாதது ஏன் ?

3.         ஆப்கானிஸ்தானில் படைகளை குவிப்பதால் தாலிபான்களை கொல்ல முடியாது என்று தெரிந்திருந்தும் அங்கு ஏன் படைகள் வலுக்கட்டாயமாக நிருத்தப்பட்டுள்ளது.

அதற்கான பதில்கள்.

உலகின் மூளையில் எதாவது ஒரு முஸ்லீம் நாடு ராணுவத்தில் அவர்களுக்கு நிகராக இருந்தால், அல்லது அதன் அண்டை நாட்டைத் தாக்கும் பலம் பெற்றிருந்தால், அல்லது லட்சியக் குழுவாக (குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் ) திகழ்ந்தால்.

அவர்களின் ராணுவ பலத்தை குறைக்கும் வரை, லட்சியக் குழுவினராகத் திகழ்பவர்களைப் பிரித்து பல கூறுகளாக்காத வரை ஓய மாட்டார்கள், உறங்க மாட்டார்கள், ஆயிரம் பொய் கூறி அங்கேப் படைகளை குவிப்பார்கள்.

ராணுவ பலமும், லட்சிய சிந்தனையும்.
வல்லரசு ரஷியப் படைகளுடன் நிகராக நின்றுப் போரிடுவதற்காக அப்பொழுது அமெரிக்காவினால் அதன் ஆதரவு நாடுகளாகிய சவுதி, எகிப்து வழிகளில் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்ட ஏராளமான நவீன ரக ராணுவத் தளவாடங்கள் இதுவரை தாலிபான்களிடம் குவிந்து கிடக்கின்றன.

குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் மறுமையை முன்னோக்கிய லட்சியக் குழுவினராக திகழ்வதுடன் நாட்டை தங்களது வசமாக்கி அதையே சட்டமாகவும் நடைமுறைப் படுத்தியத்திவர்கள் தாலிபான்கள்.

அவர்கள் வெறுக்கும் இரண்டு அம்சங்களும் ஓரிடத்தில் (தாலிபான்களிடம்) அமைந்திருப்பதைக் கண்டால் சும்மா விடுவார்களா ?

கடந்த கிபி 1885ல் விக்டோரியா மஹாராணியின் பாராளுமன்றச் சபையில் பிரித்தானிய கோழைகள் ஒன்றுக்கூடி முஸ்லிம்களின் கிலாஃபத் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடைக் கல்லாகி விட்டது அதை அகற்ற என்னத் தீர்வு என்று வெட்கங்கெட்ட கோரிக்கையை எழுப்ப அதில் கிலாடுஸ்டோன் என்ற உறுப்பினர் எழுந்து  திருக்குர்ஆனும், ஜூம்ஆ மற்றும், அரஃபா உரையும் நமது முன்னேற்றித்திற்கான தடைகற்கள் இவற்றை முஸ்லீம்களிடமிருந்து அகற்றினால் மட்டுமே நமது முன்னேற்றத்திற்கான தடை தாமாக விலகும் என்ற ஆலோசனையை முன்மொழிய அனைத்துக் கோழைகளும் அதனை வழிமொழிய  அவற்றை நடைமுறைப் படுத்தி வெற்றியும் கண்ட வரலாறு அவர்களிடம் இருக்கிறது.

அடிக்கடி தாக்குதல் தொடுத்து சிறிது சிறிதாக ராணுவ பலத்தை குறைப்பதற்காகவும், தங்களது மிருக இனக் கலாச்சாரத்தை புகுத்தி அவர்களது மார்க்கப்பற்றை சிறிது சிறிதாக குறைப்பதற்காகவும் ஆயிரம் பொய் சொல்லி ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ளனர்.

எத்தனை அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றவர் அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அமெரிக்காவின் வர்த்தக சந்தை யூதர்களின் கோரப்படியில் சிக்கி இருக்கும் வரை இரத்தக்கரைப் படியாமல் அவர்களால் ஆட்சி பீடத்திலிருந்து இறங்க முடியாது.

வல்ல அல்லாஹ் இந்த அநியாயாக்காரர்களின் கணக்கை முடிக்கப் போதுமானவன்



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்